வட மாகாணத்தில் பிறிதொரு தனியாட்சியை உருவாக்குவதற்காக அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுவந்த இரகசிய நடவடிக்கையை சிங்களப் பத்திரிகையொன்று இன்று சனிக்கிழமை அம்பலப்படுத்தியிருக்கின்றது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இதற்காக 500 மில்லியன் டொலர்கள் யூ.எஸ்.எயிட் என்கிற அமெரிக்க தன்னார்வ நிறுவனத்தினால் செலவிடப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல்கள் கசியத் தொடங்கிய நிலையில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உயரதிகாரியான ட்ரவிஸ் காட்னர், அரச சார்பற்ற நிறுவன அமைப்பின் பொதுச் செயலாளர் அலுவலகத்தினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனாலும் அந்த அழைப்பினை அவர் நிராகரித்து வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரகசிய செயற்பாட்டிற்குப் பின்னால் இருக்கின்ற தமிழ் நபர் ஒருவரையும் மேற்படி அரச சார்பற்ற நிறுவனங்களின் அமைப்பின் பொதுச்செயலாளர் செயலகம் அடையாளம் கண்டிருக்கின்றது.
இதேவேளை, யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உயரதிகாரியான ட்ரவிஸ் காட்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசா செயற்பாடுகள் யாவையும் நீதியமைச்சே மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வடமாகாணத்தில் தனியான நாடொன்றை உருவாக்கும் இந்த இரகசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மொணராகலை மாவட்டத்தில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.