புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறும், 12 அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த நிகழ்வில், பதவியேற்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இவர்கள் பதவியேற்றனர்.
1.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அமைச்சர்.
2.நிமால் சிறிபால டி சில்வா- போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்.
3. சரத் அமுனுகம- வெளிவிவகார அமைச்சர்.
4.மகிந்த சமரசிங்க துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சர்
6. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைச்சர்
7.கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்
8.விஜித் விஜேமுனி சொய்சா – மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்
9.ஆறுமுகன் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
10.டக்ளஸ் தேவானந்தா- மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சர்
11.பைசர் முஸ்தபா – மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.
12. வசந்த சேனாநாயக்க- சுற்றுலாத்துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்.
13. வடிவேல் சுரேஸ்- பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
14. ஆனந்த அளுத்கமகே சுற்றுலாத்துறை மற்றும் வனசீவராசிகள் பிரதி அமைச்சர்.