நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் நேற்று (புதன்கிழமை) இரவு 10 மணியளவில்
கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.