சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்காக வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்வதற்கு
அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முழு நாட்டிலும் காணப்படும் இவ்வாறான விடயங்களை மீள ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை
எடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.