வவுனியா – ஈரப்பெரியகுளத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்
8 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தங்கல்லையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தொன்று கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் பயணித்தவர்களில் 4 இராணுவத்தினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.