இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் அழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் புதிய ஜனாதிபதிக்கான வாழ்த்தை தெரிவித்திருந்ததுடன்,
பின்னர் தொலைபேசி மூலம் அழைத்து இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.