விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய யுத்தத்திலும் சரி இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அழைத்துவந்ததிலும் சரி அழிக்கப்பட்டது தமிழ் மக்களேயாகும்.
தெற்கில் யுத்த அச்சம் மட்டுமே இருந்தது ஆனால் வடக்கில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறந்துவிடமுடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு நாட்டில் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மனதளவிலும் வாழ்வாதார ரீதியிலும் உயர்த்தும் பொறுப்பும் எம்முடையது எனவும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக நேற்று கிளிநொச்சியில் முன்னெடுத்த தேர்தல் பிரசாரத்தில் இக் கருத்துக்களை முன்வைத்தார்.