இலங்கைக்கும், உலகத்திற்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக ஒரு முஸ்லிம் நபரை ஏன் நியமித்தார்கள் ?
தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா என
சபையில் கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா,
ஜனாதிபதியின் நெருக்கத்தின் காரணமாகவே இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் குற்றம் சுமத்தினார்.
முஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது. அவரது குடும்பம்,
வதிவிடம் என அனைத்துமே தடையாக இருக்கும். எனவே பொறுப்பான அதிகாரிகளை சரியான இடத்தில் நியமிக்க இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.