மின்னேரியாவில் நேற்றிரவு இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் பஸ் சாரதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 60 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில், நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பஸ் வண்டியும் கொழும்பில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இரண்டு பஸ்வண்டிகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இரண்டு பஸ்வண்டியில் பயணித்த 60 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி விபத்து சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.