முடங்கியது கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளும் பொதுமுடக்கம் ஒன்றின் மூலமாக இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை மக்கள் நாளுக்கு நாள் சந்தித்து வருகின்றனர்.
இலங்கை அதிபர் கோட்டாபய பதவி விலகவேண்டும் என்று இன்று இலங்கையில் உள்ள வங்கிகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருந்தனர்.
அதற்க்கு அமைவாக இன்று வங்கிகள் தமது நாளாந்த நடவடிக்கைகளை முடக்கியுள்ளனர்.
அதேபோல் காலிமுகத்திடலில் தொடர்ந்தும் போராட்டம் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.