கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். கைதி உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் கார்த்திக்கு நன்றி தெரிவித்த லோகேஷ், என்னிடம் பலரும் கேட்கும் கேள்விக்கு பதில் ‘டில்லி மீண்டும் வருவான்’ என்று கூறியிருக்கிறார்.
கார்த்தி – லோகேஷ் கனகராஜ்
கைதி படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் டில்லி. மேலும் இப்படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்திருப்பார். தற்போது அதை இயக்குனர் லோகேஷ் உறுதி செய்திருக்கிறார்.