கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன,
குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளை வான் விவகாரம் தொடர்பான ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி, பொய்யான தகவல்களை வழங்கினார்
என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரைக் கைது செய்யுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனியவினால்,
கடந்த 24ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இன்று பிற்பகல் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு சென்ற
கொழும்பு மேலதிக நீதிவான், அவரரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.