குர்துக்கள் பகுதியில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு ரஷியா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டு குழப்பம் முடிவுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியா உள்நாட்டுப்போர்: அமெரிக்காவின் தோல்வியும் ரஷியாவின் வெற்றியும்….
விளாமிடிர் புதின்
சிரியாவில் 2011-ம் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அல் அசாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனால் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் மூண்டது.
அப்போது சிரியாவில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாகவும் அதை தடுத்து நிறுத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வரப்போவதாகவும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்தார்.
இதையடுத்து அங்குள்ள போராளிகள் குழுக்களுக்கு ஆயுதம் உள்பட பல உதவிகளை செய்த அமெரிக்கா சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிவகுத்தது.