இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த தமிழக மீனவர்களின் படகுகள்
பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் என்னும் ஊரில் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இதில் 88 அடி நீளமான படகு ரூபா 13 இலாசத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு
அதிகூடிய தொகையாக விற்பனை செய்யப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் இந்த ஏலத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.
இலங்கையில் 5 துறைமுகங்களில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் இன்று ஏலம் விடப்பட்டது குறிப்பிட தக்கது.