சரத்குமார், ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.
பிறந்தநாள் பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் குறித்து நடிகர் சரத்குமார் தெரிவித்தபோது
”கதைகளமும், எங்கள் கதாப்பாத்திரமும் சரியாக அமைந்ததால் இணைந்து நடிக்கிறோம்” என கூறியுள்ளார்.
மேலும் “போடா போடி படத்தில் வரலட்சுமி முதன்முதலில் நடித்தபோது அந்த படம் வெளியாவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டது.
அப்போது ஒரு தந்தையாக அந்த படம் வெளிவர நான் வரலட்சுமிக்கு உதவியிருக்க வேண்டும்.
பிரபல இயக்குனர்களின் படங்களில் அவரை நான் நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்போது அதை செய்யாததை நினைத்து இப்போது நான் வருத்தப்படுகிறேன்.
அதற்காக என் மகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.