நவம்பர் 2ஆம் தேதியன்று இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தை நிராகரிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
புது வரைபடத்தில் லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் மற்றும் லே ஆகிய இரண்டு மாவட்டங்கள் இருக்கிறது. மீதமுள்ள 26 மாவட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் இருக்கும்.
இந்த புதிய வரைபடம் தவறானது என்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தின் தீர்மானங்களை மீறியது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையால், அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான ஜம்மு காஷ்மீரின் அந்தஸ்த்தை இந்தியாவின் எந்த நடவடிக்கையாலும் மாற்ற முடியாது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதி மக்களின் உரிமையில் இந்திய அரசு பாரபட்சம் காட்ட முடியாது என்றும் அந்நாடு தெரிவித்திருக்கிறது.
உண்மையாக தங்கள் உரிமைக்காக போராடும் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தரும் என்றும் கூறப்பட்டுள்ளது.