முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் இந்து – பௌத்த சமூகத்துக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் பின்னணியில் கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகளே உள்ளன.
பௌத்த மத பாரம்பரியங்களை பலவந்தமான முறை யில் இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
நாட்டில் 7000 பௌத்த விகாரைகள் காணப் படுகின்றன. அனைத்து பௌத்த துறவிகளும் எந்த அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கருத்துகளுக்கும் அடிபணியாமல் பௌத்த மதக் கோட்பாடுகளுக்கு செவிசாய்த்து அரசியல் ரீதியில் ஒரு தீர்மானத்தை முன்னெடுத்தால் பௌத்த மதத்தை எவ்வித ஆக்கிரமிப்புகளும் இன்றி பாதுகாக்க லாம்.
பௌத்தமதம் எந்தளவிற்கு இன்று சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பது முல்லைத்தீவு நீராவியடி விவகாரத்தின் ஊடாக வெளிப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நீராவியடி பிரதேசத் தில் 93 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிறிய பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வளவில் இருந்த ஒரு பிள்ளையார் சிலையை விகாராதிபதி விகாரைக்குள் வைத்துள்ளார். காலப்போக்கில் இந்தப் பிள்ளையார் சிலை விடயத்தில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடும்போக்குடன் செயற் பட்டார்.
நீராவியடி பிள்ளையார் வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இந்து–- பௌத்த மதங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னணியில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதமே செல்வாக்கு செலுத்தியது.
ஏப்ரல் 21 தின குண்டுத் தாக்குதலுக்குப் பின் இந்துக்களும் பௌத்தர்களும் ஒற்றுமையாகச் செயற்பட்ட மைக்கு எதிராகவே கிறிஸ்தவ அடிப்படை வாதம் அரசியல் அடிப்படைவாதிகளுடன் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது என்றார்.