மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் கடை ஒன்றில் சூப் குடிக்க சென்ற இரு குழுக்களுக்கிடையே
நேற்று இரவு இடம்பெற்ற மோதலில், 3 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள சூப் கடைக்கு அருகிலுள்ள கூளாவடி பிரதேசத்தைச் சோந்த குழுவினர்,
நேற்று இரவு 7 மணியளவில் முச்சக்கரவண்டியில் சூப் குடிக்க சென்றனர்.
அங்கு அந்த பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினரும் சூப் குடிக்க சென்றுள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்தர்க்கத்தையடுத்து மோதல் ஏற்பட்டது.
இதில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. குறித்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து முற்றாக சேதடைந்துள்ளது.
சம்பவத்தையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டது. பொலிஸார் அங்கு சென்ற நிலையில் மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ந்தவர்களும் தப்பி ஓடியுள்ளனர்.