உலகின் மிகவும் ஆபத்தான பயங்கரவாதியை நேற்றிரவு அமெரிக்க படையினர் கொலை செய்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விசேட உரையில் உறுதி செய்துள்ளார்.
சுரங்கப்பாதை ஒன்றிற்குள் சிக்குப்பட்ட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி தன்னை வெடிக்க வைத்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரபணு பரிசோதனைகள் கொல்லப்பட்டவர் அல்பக்தாதி என்பதை உறுதி செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.